சோழ நாட்டை ஆண்ட சோழர் வம்சத்தில் தோன்றிய கரிகாற்சோழன், இராஜேந்திர சோழன் என பல சோழ மன்னர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட மன்னர்களுள் ஒருவர் தான் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜேந்திர சோழன்,எனினும் பில்கணரின் விக்கிரமாங்க தேவ சரித்திரம், நீலகண்ட பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார் போன்ற சரித்திர ஆய்வாளர்களின் கருத்துகளை ஆய்வு செய்து சோழர்களின் சரித்திர நூல்களை அடிப்படையாக கொண்டு சோழ குலாந்தகன் அமைக்கப்பட்ட கதை ஆகும். ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இலக்கியப் பாடல்கள், தமிழ், ஆங்கில அறிஞர்களின் கருத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்நாவலை படிப்பதன் மூலம் பல இலக்கியங்களையும் தமிழ் மற்றும் ஆங்கில அறிஞர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.